கடந்த 2 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணித்த 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதேவேளை, சுகாதார வழிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை அடையாளம் காண்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்று புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
- Advertisement -
மேலும் இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சீருடை அணியாத காவல்துறையினர் பொதுமக்களை போன்று பயணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.