யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது.
- Advertisement -
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய பெண் ஒருவரும், 65 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 912ஆக உயர்வடைந்துள்ளதுடன்,
யாழ். மாவட்டத்தில் இன்று மாத்திரம் 44 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.