மன்னாரில் இருந்து வடமாகாணத்திற்கான தனியார் போக்குவரத்து சேவை நாளை சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பிக்கும் என தனியார் போக்கு வரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை நாளை திங்கட்கிழமை (21) காலை நீக்கப்படுகின்ற நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
பயணத்தடை நாளை திங்கட்கிழமை (21) காலை நீக்கப்படுகின்ற நிலையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து சேவைகள் இடம் பெறும்.
வடமாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களுக்கு இடையில் சேவைகள் இடம்பெறாது.மக்கள் போக்குவரத்து சேவையை பெற்றுக்கொள்ளும் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.