தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (18) வெளியிட்டுள்ளது.
- Advertisement -
தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை, 2020 செப்டம்பர் 25 திகதியன்று வர்த்தமானி அறிவிப்பு எண் 2194/73 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது இரத்து செய்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.