அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களின் செல்லுபடி காலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
- Advertisement -
மேலும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்து குறித்த அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்தோடு குறித்த அனுமதிப் பத்திரங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை எவ்வித தடங்கலுமின்றி முன்னெடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிப்பத்திரத்தை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.