எரிபொருள் விலைகள் அதிகரித்த நிலையில் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்க முடியாது என்றும் மக்கள் எரிபொருளை குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எரிபொருள் இறக்குமதிக்கு அந்நிய செலாவணி இல்லாததே காரணம் என்றும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துவிட்டால், நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- Advertisement -
கடந்த ஆண்டு, உலகில் எரிபொருள் விலை வீழ்ச்சியின் காரணமாக, எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதியில் ரூ .48 பில்லியன் தொகை சேர்க்கப்பட்டது. இது எரிபொருள் விலை அதிகரிப்பைத் தடுக்க உதவியது.இதன்மூலம் அதற்கு தீர்வு காணப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
நடுத்தர வர்க்க மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையில் சிறிய அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டது என்றும்,எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோதிலும், அரசாங்கம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.