திருகோணமலை – குச்சவெளி பகுதியில் வலையில் சிக்கிய அரிய வகை சுறாமீன் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் பயணகட்டுப்பாடுகளால் மக்களின் வாழ்வாதரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
எனினும் அந்த மீனவர்கள் தமது வலையில் சிக்கிய அந்த அரிய சுறா மீனை பாதுகாப்பாக கடலில் விடுவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த சுறா கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிலர் அரிய வகை மீனினங்களை தேடி வேட்டையாடும் இந்த காலத்தில் மீனவர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.