வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களைத் தவிர சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை ஏற்றும் நடவடிக்கை இடம்பெறாததால் அங்கு பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
மேலும் முதல் டோஸ் வழங்கப்பட்டு வைத்தியசாலையில் எஞ்சியிருந்த 22 AstraZeneca மருந்துக்குப்பிகளை தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றுவதற்கு வைத்தியசாலை அதிகாரிகள் உடன்பட்டிருந்ததாக வைத்தியசாலையின் ஊழியர்கள் குழு தெரிவித்தது.
- Advertisement -
அத்தோடு அந்தத் தடுப்பூசிகளை நேற்று புதன்கிழமை அவசரமாக எடுத்துச்செல்வதற்கு சுகாதார அமைச்சு முயற்சித்துள்ளது.
இதேவேளை வைத்தியசாலையின் குளியலறையிலிருந்து ஏராளமான வெற்று மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இது தமக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பூசி குப்பிகளா என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த குப்பிகள் முதல் டோஸ் வழங்கிவிட்டு கழிவுக்காக வைக்கப்பட்டவையென்று வைத்தியசாலை தரப்பு கூறியுள்ளது.
மேலும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத சிலருக்கு இரகசியமாக AstraZeneca தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை ஏற்ற கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் குழு தெரிவித்தது.