இலங்கையில் மேலும் 67 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1910 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும். மே மாதம் 17ம் திகதி முதல் ஜூன் 8ம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே மாதம் 17ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் 19 பேரும், ஜூன் 1ம் திகதி முதல் 8ம் திகதி வரையில் 48 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
அந்த வகையில், மே 17ம் திகதி மூவரும், 19ம் திகதி இருவரும், 20ம் திகதி மூவரும், 21ம் திகதி ஒருவரும், 22ம் திகதி நால்வரும், 23ம் திகதி ஒருவரும், 24ம் திகதி ஒருவரும், 26ம் திகதி ஒருவரும், 27ம் திகதி ஒருவரும், 31ம் திகதி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 1ம் திகதி இருவரும், 2ம் திகதி ஐவரும், 3ம் திகதி ஐவரும், 4ம் திகதி ஐவரும், 5ம் திகதி பத்து பேரும், 6ம் திகதி ஒன்பது பேரும், 7ம் திகதி எட்டு பேரும், 8ம் திகதி நால்வரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதில் வீட்டிலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.