யாழ். மட்டுவில் – பன்றித்தலைச்சி அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டியதால் பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றி வந்த பேருந்து முதியவர் ஒருவர் மீது மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.இதனையடுத்து அப்பகுதியில் கூடிய மக்கள் பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டபட்டுள்ளது.
- Advertisement -
இதனையடுத்து பிரதேசத்தில் கலகம் தடுக்கும் தயார்படுத்தலுடன் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பிட்டிருப்பதாகவும், கல் வீசி சிலர் இராணுவத்தால் துரத்தி பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.