பாகிஸ்தானில் ஆற்றில் வான் கவிழ்ந்த விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மற்றும் வானின் சாரதி உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
- Advertisement -
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகருக்கு சுற்றுலா செல்வதற்காக வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர்.
- Advertisement -
இதையடுத்து பெண்கள், சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நேற்று காலை வானில் சுற்றுலா புறப்பட்டனர். இந்த வான் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பனிபா நகரில் மலைப்பாங்கான சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு குறுகலான வளைவில் திரும்பியபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் சாலையோரம் உள்ள இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்தது.