நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பிட்டிருக்கும் பயன்தடையை தளர்த்தி விட்டு முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை, என் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
- Advertisement -
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, முழுமையான ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. கொவிட் தொடர்பான செயலணியும் இது குறித்து ஆராய இல்லை என தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் அவ்வாறான முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும்
- Advertisement -
ஆனால் அவ்வாறான தேவை ஏற்பட்டால் அதிகாரிகள் அது குறித்து ஆராய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். கொரோன வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவு குறித்தும் அரசாங்க தகவல் திணைக்களமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களோ தகவல் வழங்கும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.