தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டஅனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களில் உள்ள பாடசாலை மாணவர்ளின் புத்தகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியதாக அண்மைய காலங்களில் கல்வியமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
- Advertisement -
இதனை கருத்தில் கொண்டு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பொருட்டு அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
- Advertisement -
அதற்கமைய, அனர்த்தங்களால் பாடபுத்தங்களை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் புதிய பாடபுத்தங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
எனவே பாடபுத்தங்களை இழந்த மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகளின் பாடசாலை அதிபரிடம் உறுதிப்படுத்தல் கடிதத்தை பெற்று, அதனை வலயக்கல்வி பணிமனை ஊடாக கல்வியமைச்சுக்கு அனுப்புவதன் மூலம் பாடபுத்தங்களை பெற்று கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.