எதிர்வரும் 2 வருடங்களுக்குள் எமது நாட்டுக்கு தேவையான உப்பை வழங்க முடியுமென்றும், தற்போது மேலதிகமான உப்பு கையிருப்பில் இருப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ள உப்பளங்களை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
- Advertisement -
எமது மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், சந்தையில் சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி உப்பை பதுக்கி வைக்கும் நிலையை உருவாக்கி வருகின்றனர். உப்பின் விலையை அதிகரிக்கச் செய்வதே இவர்களின் நோக்கமாகும்
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் கடலில் தீப்பற்றியதால் எம்மால் உப்பை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிவருகின்றனர். உப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யும் நிலையை உருவாக்கியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அரசு தலையீடு செய்து உப்பை தட்டுப்பாடின்றி நிலையான விலைக்கு விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
கட்டி உப்பை 43 ரூபா முதல் 50 ரூபா வரையும் தூள் உப்பை 35 ரூபாவிற்கும் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.