இலங்கை அரச மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
191 சிகிச்சை பிரிவுகளில் கோவிட் தொற்றாளர்களுக்காக 29,530 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 26,000 படுக்கைகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 3287 படுக்கைகளே எஞ்சியுள்ளன. மேலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் இந்த எண்ணிக்கை குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நாளாந்தம் 2800 நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமாந்திரமாக நோயாளர்கள் கிசிச்சை முடிந்து வெளியேறுவதால் தற்போது மருத்துவமனைகளில் இடத்தட்டுப்பாடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் 9000 கட்டில்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.