யாழ் புன்னாலைகட்டுவான் வடக்கு – கப்பன்புல பகுதியில் காலை கடனை கழிக்க சென்றவர் மீது வீதியால் வந்த பாதுகாப்பு தரப்பினர் தாக்கியதாக குற்றம் சாட்ப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்,
- Advertisement -
உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புன்னாலைகட்டுவான் வடக்கு – கப்பன்புல பகுதியில் சுமார் 10க்கு மேற்பட்ட குடும்பங்கள் மலசக்கூடம் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தமது காலை கடன்களை நிறைவேற்ற சிலர் அருகிலுள்ள பணம் காணிக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளதாகவும் , இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் காலை கடனை கழித்து விட்டு வீடு நோக்கி வந்த போது வீட்டின் அருகே நின்ற பாதுகாப்பு தரப்பினர் எங்கே சென்று வருகிறாய்
- Advertisement -
என விசாரித்ததாகவும், விசாரித்த சமயம் பின்னால் வந்த பாதுகாப்பு தரப்பினர் ஒருவர் ஓடி விடு என கூறியபடி என்னை கேபிள் ஒன்றால் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இறுதி யுத்தத்தில் எனது ஒரு காலை துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் தலையில் துப்பாக்கி சன்னம் காணப்படுகின்றது
இவ்வாறு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு புன்னாலைகட்டுவான் பகுதியில் குடியேறிய தனக்கு இன்றுவரை மலசலகூடம் அமைப்பதற்கு ஏற்ற வசதி இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும்,
அதிகாரிகள் தனது நிலை குறித்து எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் பாதுகாப்பு தரப்பினர் தன்னை தாக்கியது மிகுந்த மனவேதனை தருவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.