திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிர் இழந்த பெண்ணுக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் கொருானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்நிலையில் சடலத்தை முத்தமிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
- Advertisement -
இவ்வாறு உயிரிழந்த பெண் திருகோணமலை-ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 50 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த 19 பேருக்கு நேற்று (07) மாலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோமரங்கடவல பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
தொற்றுக்கு உள்ளான மூவரில் ஒன்றரை வயது சிறுவனொருவர் அடங்குவதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.
அத்துடன் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தவர்களை தனிமை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்