அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 வருடங்களுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
- Advertisement -
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களின் வாக்குகளை சம்பிரதாயபூர்வமாக கணக்கிட்டு அங்கீகரிப்பதற்கான செயற்பாடுகள் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றபோது, ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்கிளல் ஈடுபட்டனர்.
- Advertisement -
தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த ட்ரம்ப், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டார். ட்ரம்பின் பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் டொனால்ட் ட்ரம்பின் கணக்குகளை முடக்கின.
ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது. ஆனால், பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக மூடாமல் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் மீதான தடை குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் மேற்பார்வை சபை விசாரணை நடத்தியது. அதன்பின் காலவரையற்றை தடையை அச்சபை விமர்சித்தது.
இந்நிலையில், டொனாலட் ட்ரம்பின் பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது. 2021 ஜனவரி 7 ஆம் திகதி இத்தடை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி வரை இத்தடை நீடிக்கும்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தடை குறித்து டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், இத்தடையானது தனக்கு வாக்களித்த மக்களுக்கான அவமரியாதை எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டொனால்டு-டிரம்ப் கூறுகையில், 2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களித்த மில்லியன் கணக்கனா மக்களுக்கான அவமரியாதை என தெரிவித்துள்ளார்.