பயணக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவான ஆறு அபாயகரமான விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை குறிப்பிட்டார்.
- Advertisement -
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குள் அதிக விபத்துக்கள் பதிவாகியுள்ளன. .விபத்துக்களில் உயிரிழந்த ஆறு பேரில் நான்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஆவர்.
- Advertisement -
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன என்றும், இந்த சம்பவத்தில் மக்கள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை குறிப்பிட்டார்.