யாழ்.ஐந்துசந்தி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி தொழுகையில் ஈடுபட்டிருந்த 14 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
- Advertisement -
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் தொழுகையில் ஈடுபட்டதற்காக அப்பகுதி சுகாதார பிரிவினரால் குறித்த 14 பேரும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- Advertisement -
யாழ்.பொலிஸார் மற்றும் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரின் விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையின்போது குறித்த பள்ளிவாசலில் தொழுகையில் பங்கு பற்றிய சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.