யாழ்ப்பாணத்தில் உள்ள 50 ஆயிரம் பேருக்கு சீன மக்கள் கொடையாக வழங்கிய சினோபார்ம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளமை, தமக்கு பெருமையையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமிழில் டுவிட்டர் பதிவு ஒன்றையும் இட்டுள்ளது.
- Advertisement -
இந்தப் பணியை முன்னெடுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் முப்படை வீரர்களுக்கும் மனமார்ந்த மரியாதையைத் தெரிவிக்கிறோம் என்றும் சீனத் தூதரககத்தின் கீச்சகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று நண்பகலுடன் முடிவடைந்து விட்டதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
இதனால், ஏற்கனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம அலுவலர் பிரிவுகளில் இன்று தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும், கஇரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் முன்னைய நிகழ்ச்சி நிரலின் படி அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.