இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி. வி சானக தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மேலும் பயணிகள் எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனையுடன் வர வேண்டுமென்றும், கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- Advertisement -
எனினும் இதன் “பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள். சுமார் 10 நாட்களில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையையும் நடத்துவோம்.
மேலும் அந்த பி.சி.ஆர் சோதனை எதிர்மறையானது என்பதை உறுதிப்படுத்தினால், நாங்கள் அவர்களை சமூகத்திற்குள் விடுவிப்போம், ”என்று அவர் கூறினார்.
அத்தோடு ஒரு விமானத்தில் 75 பயணிகள் மட்டுமே பயணிக்கக்கூடிய வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கட்டாரிலிருந்து 53 பயணிகளுடன், விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.