யாழில். ஆலயமொன்றின் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மூவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -
யாழ். நாவற்குழி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்றைய தினம் சிரமதான பணியில் சிலர் ஈடுபட்டிருந்த போது, குளவிக் கூடு கலைந்து சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தவர்களை துரத்தி கொட்டியது.
- Advertisement -
அதில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் மயக்கமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.