இலங்கையில் கொரோனாவின் 2-ம் அலை தீவிரமடைந்து வந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக இலங்கை அரசாங்கம் வருகின்ற 7-ம் திகதிவரை பயணத்தடை விதித்துள்ளது.
- Advertisement -
இந்த பயணத்தடையால் அன்றாடம் வேலை செய்து குடும்பங்களை நடத்திவந்த பல ஏழை கூலித்தொழிலாளர்கள், இன்று ஒரு வேளை உணவிற்கு போராடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
அரசாங்கம் 5000 ரூபாய் நிதி வழங்க தீர்மானம் எடுத்துள்ள நிலையில் குறித்த பணம் இன்னும் மக்களின் கைகளுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இந்த ஏழை மக்களின் எதிர்காலத்தை பற்றி வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சற்றும் ஜோசிக்கவுமில்லை, அந்த வகையில் யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குறிப்பிடத்தக்க சேவைகளை முன்னெடுத்துள்ளனர்,
அதிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சுகாஸ்சின் செயற்பாடு கொரோனா முதலாம் அலையின்போதாக இருக்கட்டும், தற்போதைய சூழ்நிலையிலாக இருக்கட்டும் குறிப்பிடத்தக்க சேவைகளை செய்துள்ளார்.
அதே போல் வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள மக்கள் பிரதிநிதிகளை வன்னி மக்கள் செல்லம் கொடுத்து வார்த்து வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும், என்னவொரு ஆபத்தான சூழ்நிலையிலும் வன்னியிலுள்ள தமிழ் எம்-பிக்கள் வெளியில் வரமாட்டார்கள், அது 2009-ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தமாகட்டும், தற்போதைய கொரோனா காலகட்டமாக இருக்கட்டும் முதலில் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக்கொண்டிருப்பார்கள்.
எல்லாப்பிரச்சினைகளும் முடிந்த பின்பு இறுதியாக வெளியில் வந்து, பாராளுமன்றில் தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டுகிற மாதிரி எதாவது பேசிவிட்டு தேர்தல்களில் மக்களின் வாக்குகளை பெற்று விடுவார்கள்.
அந்த வகையில் கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் வன்னியில் ஒரு ஆசனங்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்று வன்னி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
குறித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆசனத்தில் அக்கட்சியில் போட்டியிட்டு அக்கட்சியில் அதிக வாக்குகளை பெற்ற குணசிங்கம் திலீபன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.’
பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், கட்சிகளை தாண்டி அவரின் அண்மையை செயற்பாடுகள் அடித்தட்டு மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்து வருகிறது, மக்களுக்குள் சென்று களப்பணியாற்றக்கூடிய ஒருவராக இருக்கின்றார்,
அந்த வகையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டிடத்தில் ஏழை மக்களின் பசி தீர்க்க கொரோனா பரவும் என்ற அச்சத்தையும் தாண்டி களப்பணியாற்றிக்கொண்டிப்பதை மக்கள் பாராட்டுகிறார்கள்.
கடந்த கொரோனா முதலாம் அலையின் போது யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஆதரவாளர்களால் பல உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது,
அதேபோல் வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் ஆதரவாளர்களாலும் சில உதவிகள் செய்யப்பட்டிருந்தது, அதேபோல் வேறு சில மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சிகளாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தது. ஒருவேளை அது பாராளுமன்ற தேர்தல் காலமென்பதாலோ என்னவோ..?
நடராசா ஜெயகாந்தன்..