ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரு தடவைகள் தப்பிச்சென்ற கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
- Advertisement -
கொரோனா தொற்றினால் உயிரிழந்த இந்நபரின் உடல் மீகொட, முதுஹேனவத்த பொதுமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- Advertisement -
மேலும் ராகம, இஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு இந்த கொவிட் தொற்றாளர் கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
மேலும் அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றார்.
எனினும் இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின்போது, அங்கிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள வீடொன்றில் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்.