வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று மரணமடைந்தள்ளார்.
- Advertisement -
ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்;த நடேசன் பாலச்சந்திரன் (வயது-65) என்ற முதியவர் சுகயீனம் காரணமாக அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்;தார்.
- Advertisement -
அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.