வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா இன்று அதிகாலையில் சிறப்பாக இடம்பெற்றது.
- Advertisement -
அனுமதிக்கப்பட்ட ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களுடன் பொலீசார்,படையினரின் கண்காணிப்பில் வைகாசி விசாக பொங்கல் நடைபெற்றது.
- Advertisement -
கடந்த 17 ஆம் திகதி கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் கடந்த ஏழு நாட்கள் கடல்நீரில் எடுக்கப்பட்ட தீர்த்தத்தில் எரிந்த தீபம் ,தீர்த்தம் மற்றும் மடைப்பண்டங்களுடன் ஆலயத்திற்கு நேற்று எடுத்துவரப்பட்டு பொங்கல் நிகழ்வுகள், பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது.
இதேவேளை ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ அல்லது ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவோ பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் இரண்டு பிராதன வீதிகளிலும் படையினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அனுமதிக்கப்பட் 51 பேர் மாத்திரம் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.