வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவதற்காக பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு மே 21ஆம் திகதி இரவு 11.59 மணி தொடக்கம் மே 31 இரவு 11.59 மணிவரையான காலப்பகுதியில் இந்த தடை அமுலில் இருக்கும்.
- Advertisement -
எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் சரக்கு விமானங்களின் சேவை தொடரும் என்பதோடு, சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.