கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை, இலங்கையிலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில், அதனைவிடவும் அதிகரித்துகொண்டே செல்கின்றது.
- Advertisement -
மின்மயானங்களில் எரியூட்டுவதற்காக, பல நாள்களாக சடலங்கள் வைக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும் இந்தியாவில் இடம்பெறாமல் இல்லை.
- Advertisement -
வீதியோரங்களில் மயங்கி விழுந்து மரணிக்கும் சம்பவங்களுக்கும் அங்கு குறைவில்லை. இந்நிலையில், இலங்கையில் பிடிக்கப்பட்ட படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
வீதியோரத்தில் மயங்கி விழுந்த முதியவர், மரணமடைந்துவிட்டார். அவரது உடல் போர்த்தப்பட்டிருக்கின்றது. இந்தப் படம், கடவத்தை- கிரிலவல எனுமிடத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,429 பேர், இன்றையதினம் இலங்கையில் இனங்காணப்பட்டனர். தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 132,527ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.