17வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன் கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் பொலீசார் தேடத் தொடங்கியதும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
- Advertisement -
பின்னவலப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. 17வயதான பாடசாலை மாணவியை மிரட்டி பலவந்தமாக வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன் பலதடவை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளார்.
- Advertisement -
சம்பவத்தை அறிந்த மாணவியின் தாயார் பொலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். பொலீசார் தேடத் தொடங்கியதும் தலைமறைவான சந்தேக நபர் காட்டுப்பகுதியிலேயே தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பலாங்கொட நீதவான் சடலத்தைப் பார்வையிட்டு மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டார். சடலம் பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.