கிளிநொச்சி அம்பாள்குளத்தில் பெண் ஒருவரின் சடலம் காணப்பட்ட நிலையில் அது யாருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் அருகில் இருந்த பை ஒன்றில் காணப்பட்ட தேசிய அடையாள அட்டையில் ஆறுமுகம் திலகேஸ்வரி உருத்திரபுரம் எனும் முகவரி காணப்பட்டுள்ளது. 1984 பிறந்த பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
முதலாம் இணைப்பு

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.