கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட் – 19 தடுப்பூசியினை செலுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னரங்கப்பணியாளர்களில் இறுதி நபராக தான் தடுப்பூசியைப் பெறுவதாகவும், அனைத்து முன்னரங்கப் பணியாளர்களும் தடுப்புமருந்தைப் பெற்ற பின்னர் தான் தடுப்புமருந்தைப் பெற்றுக் கொள்வேன் என அறிவுறுத்தியதாக ஷவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளார்.
- Advertisement -



குறித்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முப்படையினருக்கு மட்டுமான தனியான இன்னொரு தடுப்புமருந்து தொகுதியைப் பெற்றுத் தருவேன் என உறுதியளித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
