நாடளாவிய ரீதியில் தற்போது வறட்சியான காலநிலையால் நீரேந்து பகுதிகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது.இதனால் வறட்சியான நிலை ஏற்பட்டள்ளது. இந்த பின்னணியில் எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மின்வெட்டினை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
