

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டுநாள் விஜயமாக சற்று முன்னர் பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேரடியாக சென்று வரவேற்றார். இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடைபெறுவதுடன் 6.30 மணிக்கு இருதரப்பு கூட்டறிக்கை வெளியிடப்படும்.
- Advertisement -

நாளையதினம் முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கவுள்ளார்.11 மணிக்கு வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்திப்பு இடம்பெறும்.நண்பகல் 12.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருடன் சந்திப்பு மதிய உணவும் இடம்பெறும். மாலை 3 மணிக்கு நாட்டிலிருந்து புறப்படுவார்.
- Advertisement -

