இந்த உலகத்தில் பல வகையான பெற்றோர்கள் இருக்கின்றனர். அவர்களின் குழந்தை வளர்ப்பு முறை அவரவர்களின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும். ஆனால் எல்லா பெற்றோர்களின் ஒரே நோக்கம் தன் குழந்தைகளின் எதிர்காலமானது தன்னிச்சையாக இருக்க வேண்டும். அவர்கள் தன் வாழ்வில் யாரையும் சார்ந்து இருக்க கூடாது. நாம் பட்ட துன்பும் தன் குழந்தைகள் படக்கூடாது என்பது தான்.
- Advertisement -
குழந்தைகள் பெரியவர்கள் ஆகி திடீரென்று தன்னிச்சையாக செயல்பட ஆரமிக்க மாட்டார்கள். அவர்களை குழந்தை பருவத்தில் இருந்தே அதற்காக பழக்க வேண்டும். எல்லா குழந்தையும் தன் மூன்றாவது வயதில் இருந்து தன்னை சுற்றி நடப்பதை எளிதில் கிரகித்துக்கொள்ள ஆரமிக்கின்றது. இந்த வயதில் இருந்தே அவர்களை தனித்து செயல்பட செய்யவேண்டும்.
- Advertisement -
குழந்தைகளுக்கு தனித்து முடிவெடுக்கும் திறன் அவசியமானது. அவர்களின் தேர்வுக்கு சிறு வயதில் இருந்தே முக்கியத்துவம் அளிக்க வேனுடம். அதுவே அவர்களை தனித்து முடிவெடுக்க தயார்படுத்தும். இவர்களே வாழ்க்கையில் கடினமான தருணங்களில் எளிதில் சிறந்த முடிவெடுத்து அதற்கேற்ப செயல்படுவர். சிறு குழந்தைகளாக இருக்கும்போதில் இருந்தே உணவு, விளையாட்டு பொருட்கள், உடைகள் போன்ற விஷயத்தில் அவர்களை தனித்துவத்தை ஆதிர்க்க வேண்டும்.
யாரையும் கேட்காமல் அவர்கள் சில இடங்களில் முடிவெடுக்கும்போது அவர்களை திட்டாமல், அடிக்காமல் குழந்தைகள் எடுத்த முடிவை ஆதிர்க்க வேண்டும். அவர்களின் தைரியத்தை பாராட்ட வேண்டும். அவர்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் முடிவை பற்றி கவலைப்படாமல் அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். முடிவு தோல்வியாக இருந்தாலும் அடுத்த முறை அந்த செயலை சரியாக செய்யும் படி உற்சாகம் அளிக்க வேண்டும்.
இதனால் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும். அவர்கள் ஈடுபடும் செயலில் தவறுகள் இருந்தால் அதனை எடுத்து சொல்லி அவர்களை திருத்த வேண்டும். அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு நிலைமையை எடுத்துரைக்க வேண்டும். மேலும் அவர்கள் ஒரு விஷயத்தை தவறாக செய்துவிட்டால் அவர்களை புறக்கணிக்காமல் அதனை சரியாக செய்து எப்படி வெற்றி காண்பதென்று கற்றுக்கொடுக்க வேண்டும். இது போல் செய்வதின் மூலம் அவர்கள் தோல்வியை கண்டு பயந்துவிடாமல் தைரியமாக நின்று போராடுவார்கள். இதன் மூலம் வாழ்கையில் ஒரு சிறந்த போராளியாக அவர்கள் மாறுகின்றனர்.
வீட்டு வேலைகளிலும் அவர்களை பெரும்பாலும் ஈடுபடுத்துங்கள். அதன் மூலம் அவர்களுக்கு குடும்ப சூழலும், பொருளாதாரமும் புரிய வரும். இவ்வாறு செய்தால் அவர்கள் தன் குடும்ப நிலையை அறிந்து வளருவார்கள். மேலும் ஒரு வேலையை அவர்களுக்கு கொடுக்கும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை கண்டிப்பாக முடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் நேர மேலாண்மையை கற்றுகொள்வார்கள்.
குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது பெற்றோர்களின் கருத்தை அவர்கள் மீது திணிக்காமல் இருப்பது தான். நான் மருத்துவர் ஆகா வேண்டும் என்று நினைத்தேன் நீ எனக்காக மருத்துவர் ஆகா வேண்டும் என்று கூறுவது. ஆனால் உண்மையில் அந்த குழந்தையின் கனவு வேறாக இருக்கலாம். உங்களின் கனவு உங்களுடையது அதனை நீங்கள் தான் அடையவேண்டும். குழந்தைகளுக்கென்று தனியாக வாழ்க்கை இருக்கின்றது என்பதை மறந்துவிட கூடாது.
அதுமட்டுமின்றி சில சமயம் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தகுந்த நேரங்களில் உதவுவது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை அந்த செயலை அவர்களே முயன்று முடிக்குமாறு செய்ய வேண்டும்.
வாழ்கையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றோர்களால் உடன் இருக்கமுடியாது. அதனால் அவர்களை தனித்து வாழும்படி வளர்க்க வேண்டும். அதுவே சரியான குழந்தை வளர்ப்பு முறை.