உலகின் பல நாடுகளுக்குள் தலைதூக்கியுள்ள கோவிட்டின் திரிபான ஒமிக்ரோன் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.
- Advertisement -
கோவிட் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொற்று 29 நாடுகளிலும் இதுவரை மொத்தமாக 372 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தமது எல்லைகளை மூடியுள்ளதுடன், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.