கனடாவில் முதன்மையான துறைகளில் திறன் மிகுந்த ஊழியர்களின் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் 2022ல் கனடியப் பொருளாதாரமானது சாதனையாக குறைந்த வேலைவாய்ப்பின்மையை பதிவு செய்துள்ளது.
- Advertisement -
இந்த நிலையில், முதன்மை துறைகளில் திறன் கொண்ட ஊழியர்களின் பற்றாக்குறை இருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில், digital மற்றும் STEM திறன் கொண்ட ஊழியர்களுக்கு கனடாவில் இனி அதிக வேலைவாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
- Advertisement -
ஆண்டுக்கு 500,000 புலம்பெயர் மக்களை கனடா நிர்வாகம் எதிர்பார்க்கும் நிலையில், digital மற்றும் STEM திறன் கொண்ட ஊழியர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்.
இன்னொன்று திறமையான வர்த்தகர்களுக்கு கனடாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒன்ராறியோ அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒன்ராறியோவில் திறமையான வர்த்தகத் தொழிலாளியின் சராசரி வயது 47 என கூறுகின்றனர்.
மேலும், குடியிருப்பு கட்டுமான துறையில் மட்டும், கனடா முழுவதும் 128,400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 2031 க்குள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மே 2022ல் வெளியான அறிக்கையின்படி 102,100 தொழிலாளர்கள் மட்டுமே குடியிருப்பு கட்டுமான துறையில் பணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் புலம்பெயர் மக்களுக்கு குடியிருப்பு கட்டுமான துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருக்கிறது. மூன்றாவதாக சுகாதாரத்துறையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவே நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்