யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
- Advertisement -
இதன்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
- Advertisement -
வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது வர்த்தகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட் ஏற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம் காலாவதியான பொருட்களை அழிக்க உத்தரவிட்டுள்ளது.
யாழ்.நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகளிலும் குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகளும் வண்ணார் பண்ணை ஒரு கடையும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கினர்.
இதனையடுத்து உரிமையாளர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 14 ஆம் திகதி தாக்கல் செய்த வழக்குகள் இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது கடை உரிமையாளர்கள் 12 பேரும் குற்றங்களை ஏற்று கொண்டதையடுத்து கடை மொத்தமாக 305,000/= தண்டப்பணமாக செலுத்துமாறும் காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.