பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் சமூக சேவையாளருமான ஒருவரின் பரிதாப மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- Advertisement -
தனபாலசிங்கம் தர்சிகன் (வயது 31) என்ற இளம் குடும்பஸ்தரே இரத்தப் புற்றுநோய் காரணமாக பிரான்ஸ் நாட்டில் நேற்று (09) உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
கடந்த கால யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த நிலையில், இந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் திருமணம் செய்து இரண்டு வருடங்களே ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.