பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பத்து வயதான சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தின் ரொட்டாவ சீப்புக்குளத்தில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு சிறுமியே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் தகவல் கிடைத்ததனையடுத்து கல்லஞ்சிய பொலிஸ் பொறுப்பதிகாரி உட்படலானோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியை மீட்டுள்ளனர்.
இதனையடுத்த அவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்லஞ்சிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தொடர்பான மருத்துவ அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாததை தொடர்ந்து இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் மெரிவித்துள்ளனர்.