மட்டக்களப்பு – வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஏழு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
- Advertisement -
6,7,8,9 ஆம் இலக்க வாகனங்கள்; எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்களை இன்று அதிகாலை 5 மணி அளவில் யானையின் தாக்குதலுக்குள்ளாகின.
- Advertisement -
யானை கூட்டங்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை நொறுக்கி சேதமாக்கி அவை வீதியை கடந்து சென்றுள்ளதாக மோட்டார் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் யானைக் கூட்டங்களினால் சேதமாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் மூன்று வாகனங்கள் முற்றாகவும் 4 வாகனங்கள் சிறிதளவு சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.