“மருத்துவர் என்றால் உயிரை காக்கும் கடவுள்” என பார்க்கும் நோயாளிகளை, தரக்குறைவாகவும் ஏளனமாக நடத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பல இடங்களில் நடந்த வண்ணம் உள்ளன.
- Advertisement -
இன்றைய தினம், அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை ஒன்றில் வைத்தியர் ஒருவரின் அசண்டையீன நடத்தை தொடர்பாக சமூக வலைத்தளமொன்றில் ஒருவர் விரக்தியாக பதிவிட்டுள்ளார்.
- Advertisement -
குறித்த வைத்தியர், நோயாளி ஒருவரை பரிசோதனை செய்யும் போது, வைத்தியர் மேசை மேல் காலை போட்டு இருந்தவாறு தொலைபேசியுடன் இருந்த புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க, மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?