நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினியின் பதிவு வைரலாகி வருகின்றது.
- Advertisement -
கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை மருத்துவ மாபியாக்கள் குறிவைத்த நிலையில், அது குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியதால் மக்கள் மத்தியில் மருத்துவர் பிரியந்தினி அதிகம் பேசப்படுபவராக மாறினார்.
- Advertisement -
அதேசமயம் குறித்த மருத்துவ மாபியாக்களை இனம் காட்டியதால் மருந்துவர் பிரியந்தினிக்கு பல அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்தார். அதில் ஒரு சிலர் தாங்கள் அரசாங்கத்தில் இருப்பவர்கள் என மருத்துவர் பிரியந்தினிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
தற்போது பொருளாதார நெருகடியால் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராட்டங்களை தொடர்ந்தவண்ணமுள்ளனர். இந்நிலையில் மருத்துவர் பிரியந்தினி வெளியிட்ட முகநூல் பதிவொன்றில்,
3 மாசம் முன்னாடி எனக்கு ஒரு அப்பாவி ஜீவன் கோல் எடுத்திச்சு நான் இவருக்கு பக்கத்த தான் இருக்குறன்டாக்டர் உன்னை கொல்லுறன் வெட்டுறன் எண்டு இப்ப அந்த ஜீவன்ர நிலையை ஒரு முறை யோசிச்சு பாக்குறன். வாழ்க்கை ஒரு வட்டமெல்லே என வைத்தியர் பிரியந்தினி Priyaanthini தனது முகநுால் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.