இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலத்திற்கு முன்னாள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -
இந்நிலையில் கோட்டபாய போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபல்யம் அடைந்துள்ளது. சாதாரண குடும்பஸ்தர் போன்று ஒருவர் பொருட்களை வாங்க வரிசையில் காணப்படுகிறார்.
- Advertisement -
அதனை கோட்டபாய என சுட்டிக்காட்டும் சமூகவலைத்தளவாசிகள், மன்னர்கள் போன்று மக்களின் மனநிலையை அறிய மாறுவேடத்தில் ஜனாதிபதி வந்துள்ளதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
உண்மையில் இந்தப் புகைப்படம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அல்ல. அவர் போன்று தோற்றமுடைய பொது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.