கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையுடன் இணைந்து குறைந்த வருமானம் பெறும் சுமார் 10,000 குடும்பங்களுக்கு தலா 5,000.பெறுமதியான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை 16 இலங்கை அரசியல் கட்சிகள் மூலம் வழங்கியுள்ளது.
- Advertisement -
இலங்கைக்கான சீனத் தூதுவர், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெளிநாட்டு உறவுகளின் தலைவர் கிறிஸ் பல்தசார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று தெஹிவளை – கல்கிசை மாநகர சபை வளாகத்தில் முதலாவது நிகழ்வு இடம்பெற்றது.
- Advertisement -
இந்த இக்கட்டான காலங்களில் இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து நாமல் ராஜபக்ச ட்வீட் செய்திருந்தார்.