உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) நேட்டோ நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைன் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமை குறித்து நேரடியாகக் கேட்டறிய, நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதனிடையே, உக்ரைனில் ரஷ்யாவின் முழு அளவிலான போர் நடவடிக்கையால் இதுவரை கார்கிவ் நகரில் 1,143 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 998 குடியிருப்பு கட்டிடங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரையில் 15 ஆயிரம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ரஷ்யாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியில் உக்ரைன் இராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர்.
அங்குள்ள மரிங்கா நகரில் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கும் கடும் போர் நடந்து வந்தது. அந்நகரை கைப்பற்றிய போராளி குழுவினர், உக்ரைன் வீரர்கள் விட்டுச் சென்ற ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.