உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை செய்ய, 3 முறை முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், , உக்ரைன் அதிகாரிகள் அலர்ட்டாக செயல்பட்டதால் அதிபர் மீதான இந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
- Advertisement -
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருப்பது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், உக்ரைனைவிட ரஷ்யா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதுடன் படை பலமும் அதிகம் என்பதே ஆகும். அதேசமயம் , உக்ரைனில் பெரும்பாலான ஆண்கள் ராணுவப்பயிற்சி பெற்றிருப்பதால், ரஷ்யாவை எதிர்கொண்டு சளைக்காது தாக்கி வருகின்றனர்.
- Advertisement -
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.
ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பானது, 400 பேரை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளதாகவும், இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த 400 பேரும் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாது , உக்ரைன் அதிபரோடு (Volodymyr Zelenskyy) சேர்த்து அவரது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டதுடன், இதற்காகவே அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம் ரஷ்ய அதிபர் புதின்தான் (Vladimir Putin) என்றும் கூறப்பட்டது. ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, இன்னொரு பக்கம் உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்புவதா என்று காட்டமான கேள்விகளை தலைவர்கள் எழுப்பினார்கள். உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில், இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது உக்ரைன் அதிபரை (Volodymyr Zelenskyy) கொல்வதற்காக நடந்த 3 முயற்சிகளை, அந்த நாட்டு அதிகாரிகளே திறன்படி முறியடித்துள்ளார்களாம் என தி டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, உக்ரைன் அதிபரை கொலை செய்வதற்காக வாக்னர் குழுவானது, சிசின் போராளிகள் குழுவுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருமே உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வெவ்வேறு குழுக்கள் இதற்காக அனுப்பப்பட்டபோதும், , உக்ரைன் தாக்குதலை விரும்பாத ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை பிரிவின் அதிகாரிகளே, உக்ரைன் அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்தனராம்.
அவர்கள் கொடுத்த தகவலின் பின்னரே உக்ரைன் அதிகாரிகள் உசாராகியுள்ளனர். உடனடியாக அவர்கள் கீவ் நகருக்கு பறந்து அங்கு கடந்த சனிக்கிழமையன்று சிசின் குழுவை சேர்ந்தவர்களை சுட்டு தள்ளி உள்ளனர்.
அதுமட்டுமல்லாது எங்கெல்லாம் வாக்னர் குழுவினரின் நடமாட்டம் தென்பட்டதோ, அங்கெல்லாம் அவர்களின் கொலை முயற்சிகளை முறியடித்து விட்டோம் என்று உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்ததுமே, அதிபரை தாங்கள் பத்திரமாக அழைத்து செல்வதாக அமெரிக்கா தெரிவித்தும் அதற்கு தாங்கள் மறுத்துவிட்டு, கீவ் நகரிலேயே பாதுகாப்பாக தங்க வைத்ததாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் அதிகாரிகளின் இந்த துணிச்சலான நடவடிக்கைதான் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் இதற்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மனுவேல் மைக்ரான் இதை பற்றி சொல்லும்போது, தைரியம், நேர்மை, சுதந்திரத்திற்கான அடையாளமாக ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) திகழ்கிறார் என்றார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் முதல் குறியாக நான் தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) , பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த புதின் முன்வர வேண்டும் என்றும் உக்ரைன் சரணடைந்து விடும் என யாராவது நினைத்தால், அவர் உக்ரைனை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை என்றே அர்த்தம் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.