வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டைப் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
- Advertisement -
இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. அங்கு நின்ற பனை மரத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காண்பித்து, இதுதான் “பல்மேறா” (பனை மரம்) என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.
- Advertisement -
இதில் ரொடி (கள்) கிடைக்கும். மதுவகை என சைகை மூலம் காண்பித்து, இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்கப்படுத்திய போது, சீனத் தூதுவர் அதற்கு ஹா ஹா என சிரித்த சம்பவம் இடம்பெற்றது.