எதிர்வரும் 3 வருடங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துக் கொண்ட ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “எந்த தயக்கமும் இல்லாமல் கடினமான முடிவுகளை எடுத்து மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மஹா சங்கத்தினரால் எதிர்பார்ப்பதை ஒரு பங்கு கூட குறைக்காமல் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்.
- Advertisement -
இதுவரை அரசு செய்த தவறுகள் மற்றும் பிழைகளை திருத்தவும் நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நான் வேலை செய்வதில்லை. நான் அந்த தீர்மானத்தை மக்களுக்கு அறிவித்துள்ளேன்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.