யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் 20 வயதான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தமிழ்செல்வன் அஜந்தன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
குறித்த இளைஞர் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் சிறந்த பண்புகளை கொண்டவர் என்பதுடன் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியிருந்தார். இந்நிலையில் இளைஞரின் திடீர் உயிரிழப்பால் குப்பிளான் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.